
தமிழர் பகுதியில் விடுதி முற்றுகையின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது
தமிழர் பகுதியான வவுனியா, ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி அவர்களின் தலமையில் நீதிமன்ற அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும், போதைப்பொருள் பாவித்திருந்தமையுடன் விபச்சாரத்திற்கு உடந்தையாக செயற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் இரு ஆண்களும் என நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.
தமிழர் பகுதியில் விடுதி முற்றுகையின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது
கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
குறித்த விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பின்னணியில் இயங்குகின்றமையும் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.