
தடம் புரண்டதால் ரயில் சேவையில் தாமதம்
கொட்டா வீதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாலை 4 மணி அளவில் கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணிக்க ஆரம்பித்த அலுவலக புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 2 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.