
சொத்துக்களை சேதப்படுத்திய 58 பேர் இதுவரை கைது
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தியதுடன் பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 58 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 32 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 26 பேரை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.
பெண் ஒருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28 ஆம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீ்டு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
சொத்துக்களை சேதப்படுத்திய 58 பேர் இதுவரை கைது
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 24 சந்தேகநபர்கள் கைது செய்யபட்டனர்.
24 சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.
பெண்கள் 4 பேருக்கும் பிணை வழங்கப்பட்டதுடன், ஆண்கள் 20 பேருக்கும் எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு
- அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – மேலும் இருவர் காயம்
- மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
- சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு கைது
- கொழும்பு ஹோட்டல்களுக்கான கட்டணம் குறித்த வர்த்தமானி வெளியீடு
- நியூயோர்க்கில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பு
- பிராபகரானுக்கு முன்பு பின்பு வரலாற்றை மாற்றுவேன் சீமான் தடலடி பேச்சு
- வரிக் கொள்கைக்கு எதிராக IMF பிரதிநிதிகளிடம் மனு
- கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய சிறை அதிகாரி கைது
- தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்