
காலி துறைமுகத்தில் வெளிநாட்டவர் உயிரிழப்பு
காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கி 61 வயதான லிதுவேனியா நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி பயணித்த கப்பல் ஒன்று காலி துறைமுகத்திற்கு பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வந்த போது குறித்த நபர் துறைமுகத்தில் இறங்க முற்பட்ட வேளையில் கடலில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.