
கண்காணிப்பு குழுவிற்கு இருவர் நியமனம்
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் பதவிகளை துறந்த
நிலையில் அவர்களின் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக சரத்வீரசேகர மற்றும் நாலக்க பண்டார கொத்தேகொட ஆகிய இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பழனி திகாம்பரம் மற்றும் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் துறைசார் கண்காணிப்புக் குழுவில் இருந்து விலகியதன் காரணமாகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.