கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை

கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை
இதனை SHARE பண்ணுங்க

கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவித்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (11) இரவு 11மணியளவில் நீதவானின் வாசஸ்தலத்தில் 18 பேரையும் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே பதில் நீதவான் இந்த உத்தரவையிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா
கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர் நேற்று (11) மதியம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இதனை SHARE பண்ணுங்க