ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்

ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்
இதனை SHARE பண்ணுங்க

ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கடத்தி, தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் அமைப்பாளர் என கூறப்படும் நபர் ஒருவர்

பொரளை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடவத்த ரன்முத்துகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியைக் கடத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜீப் ஒன்றும் சந்தேகநபருடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்

பொரளையில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி, கடந்த மாதம் 13ஆம் திகதி கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களாகக் காட்டிக் கொண்டு வந்தவர்களால் , அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கடவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவை மாவட்டத்தின் தொகுதி அமைப்பாளர் என பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது


இதனை SHARE பண்ணுங்க