இளைஞனுக்கு எமனாக வந்த நாய்

இளைஞனுக்கு எமனாக வந்த நாய்
Spread the love

இளைஞனுக்கு எமனாக வந்த நாய்

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் நாய் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மகாறம்பைக்குளத்தை சேர்ந்த டனுஜன் (வயது 20) என்ற இளைஞர் பலியாகியுள்ளார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.