இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் கைது

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Spread the love

இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் கைது

இலங்கை ஜேர்மன் நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டில் பயணித்த இலங்கை பிரஜை மற்றும் ஜேர்மன் நாட்டவர் ஆகியோர் லண்டன் மற்றும் காத்மாண்டு செல்வதற்காக விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தங்களுடைய போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொண்டனர்.

இதையடுத்து பொலிஸார் இலங்கை ஜேர்மன் நாட்டவர்கள் மீதும் மோசடி, மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த குற்றத்தில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளனரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்