இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி
Spread the love

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த

படிக்கல் 38 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சாம்சன் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், அஷ்வின் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி

மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த பட்லர் அரைசதம் அடித்த நிலையில் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் கெய்க்வாட் 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க

அவரைத் தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ரகானே 31 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 8 ஓட்டங்களும், மொயின் அலில் 7 ஓட்டங்களும், அம்பத்தி ராயுடு 1 ஓட்டமும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 37 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஜடேஜாவுடன் அணித்தலைவர் தோனி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால், 1 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால், 6 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜடேஜா 25 ஓட்டங்களையும் , தோனி 32 ஓட்டங்களையும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.