இராணுவத் தளபதி வடக்கிற்கு விஜயம்

இராணுவத் தளபதி வடக்கிற்கு விஜயம்

புத்தாண்டு விடியலை முன்னிட்டு புதுவருடகால பாராட்டுக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், தங்கள் குடும்பங்களிலுருந்து அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி, வடக்கில் தமது கடமைகளில்

ஈடுபட்டுள்ள முப்படையினர் மீதான தனது அக்கறையை எடுத்துக்காட்டுவதற்காவும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின்

தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அனைத்து முப்படை வீரர்களின் நினைவாக முதலில் அஞ்சலி செலுத்தினார்.

குணமடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் காயமடைந்த போர்வீரர்கள் நலமுடன் இருக்க பிராத்தனை செய்தார். மேலும் முப்படையினர்களினால் மீட்புபணிகளில் ஆற்றப்படும் சிறந்த

பணிகளை இராணுவத் தளபதி பாராட்டியதுடன் அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டார்.

‘2021 ஆம் ஆண்டு முழுவதும் கொவிட்-19 தொற்றுநோய்களின் போது, நீங்கள் மற்றும் எங்கள் சகோதர சேவைகள், சொந்த உயிருக்கு ஆபத்துகள் இருந்தபோதிலும், தேசத்தின் சிறந்த

நலனுக்காக எவ்வாறு செயல்பட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ‘முடியாதென்று எதுவும் கிடையாது’. என்ற உறுதிமொழியுடன் தொற்றுநோயின் மோசமான நிலையைக்

கட்டுப்படுத்துவதன் மூலம் சிறந்த முடிவுகளைக் கொண்டுவருவதற்கு இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்குவதற்கு கடற்படை பெரிதும் பங்களித்துள்ளது.

ஜனாதிபதி மற்றொரு சவாலான சேதனை பசளை உற்பத்தியை ஆரம்பித்து அதற்காக தொழில்முறை வீரர்களாகிய எமக்கு இப்பணியை ஒப்படைத்துள்ளார். மிகுந்த நம்பிக்கையுடன் பசுமை வேளாண்மை நடவடிக்கை மையத்தின் தலைவராக ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார்,

மேலும் இந்த புதிய சவாலான பொறுப்பில் உங்கள் பங்கேற்பு நாட்டை பசுமையாக மாற்றும் அதே வேளையில் விரும்பிய இலக்குகளை அடைய உதவும், ‘என்று அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஏனைய சமூகவிரோத செயற்பாடுகளை எமது மண்ணில் இருந்து ஒழிப்பதற்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வசதியற்ற பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டு

மைதானங்கள், பொது மைதானங்கள், பொது இடங்கள், குளங்கள், மேம் பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிப்பது போன்ற அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதும்

சமாந்தர முக்கியத்துவமானது. அந்த தேசிய பணிகளுக்கான உங்கள் அர்ப்பணிப்பின் அளவு வரும் ஆண்டிலும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Author: நலன் விரும்பி

Leave a Reply