
அரசை கவிழ்க்க யாருக்கும் உரிமை இல்லை
நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்களால் நாட்டை மீண்டும் சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது என நகர அபிவிருத்திமற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
அரசாங்கத்தை கவிழ்க்க மக்களுக்கு உரிமை உண்டு ஆனால் அரசை கவிழ்க்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் இது ஒரு பயங்கரவாத செயல் என்றும் அமைச்சர் கூறுகிறார்.
காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.