அம்மன் ஆலயத்தை அடித்து நொறுக்கிய யானைகள்

அம்மன் ஆலயத்தை அடித்து நொறுக்கிய யானைகள்

அம்மன் ஆலயத்தை அடித்து நொறுக்கிய யானைகள்

அம்மன் ஆலயமான நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை ,யானைகள் அடித்து நொறுக்கிய சம்பவம், பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .

கடந்த தினம் இரவு நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த ,ஐந்து யானைகள் ,அந்த ஆலய மதில்களை உடைத்து ,களஞ்சிய சாலையில் இருந்த அரிசியை எடுத்து உட்க்கொண்டுள்ளனர் .

மேலும் அந்த ஆலயத்தில் நின்ற மிக பெரும் மாமர கிளைகளை உடைத்து இருந்துள்ளது .

யானைகள் புரிந்த அட்டகாச தாக்குதலில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது .


காவலாளி அங்கிருந்த பொழுதும் யானைகளின் தாக்குதலின் பொழுது அவர் அச்ச முற்ற நிலையில் ,யானையை விரட்டது தன்னை பாதுகாத்து கொண்டார் என ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய குழு தெரிவித்துள்ளது .