
அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்
போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா அலுவலகம் இன்று (09.07) வவுனியா, தோணிக்கல் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே குறித்த படங்களுடன் முன்னாள் போராளிகள் ஒன்று கூடியிருந்தனர்.

முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரி சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகள் அனுககூடிய வகையில் அலுவலகங்களை திறக்கவுள்ளது.
இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்திருந்தார்.

அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்
இதன்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் போராளி சிவகுமாரன், விடுதலைப்புலிகளின் அரசியல் பெறுப்பாளர் தமிழ் செல்வன், அரசில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், தியாகதீபம் திலீபன் மற்றும் அனைபூபதி ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அரசியல் கைதியான செ.அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேழிகுமரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.